திருத்தமிகு முனிவர்களும் தேவர்களும் அழியாச் சித்தர்களும் சிருட்டிசெயும் திறத்தர்களும் காக்கும் அருத்தமிகு தலைவர்களும் அடக்கிடல்வல் லவரும் அலைபுரிகின் றவர்களும்உள் அனுக்கிரகிப் பவரும் பொருத்துமற்றைச் சத்திகளும் சத்தர்களும் எல்லாம் பொருள்எதுவோ எனத்தேடிப் போகஅவர் அவர்தம் கருத்தில்ஒளித் திருக்கின்ற கள்வனைஎன் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே