கருணைஒன்றே வடிவாகி எவ்வுயிரும் தம்உயிர்போல் கண்டு ஞானத் தெருள்நெறியில் சுத்தசிவ சன்மார்க்கப் பெருநீதி செலுத்தா நின்ற பொருள்நெறிசற் குணசாந்தப் புண்ணியர்தம் திருவாயால் புகன்ற வார்த்தை அருள்நெறிவே தாகமத்தின் அடிமுடிசொல் வார்த்தைகள்என் றறைவ ராலோ சாலையப்பனை வேண்டல் கொச்சகக் கலிப்பா