எந்தையே என்பவர்தம் இன்னமுதே என்உரிமைத் தந்தையே தாயே தமரேஎன் சற்குருவே சிந்தையே ஓங்கும் திருவொற்றி ஐயாஎன் நிந்தையே நீங்க நிழல்அளித்தால் ஆகாதோ